search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக இடைத்தேர்தல்"

    கர்நாடக மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரு சட்டசபை தொகுதிகளில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் தெரியவந்துள்ளது. #votingconcludes #karnatakabypolls
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியை எதிர்த்து பா.ஜ.க. தனியாக களமிறங்கியது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் இன்றைய இடைத்தேர்தல்களின் பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற இடைத்தேர்தலை சந்தித்த சிவமோகாவில் 61.5 சதவீதம், பெல்லாரியில் 63.85 சதவீதம் , மாண்டியாவில் 53.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன,

    சட்டசபை  இடைத்தேர்தலை சந்தித்த  ராமநகரில்  73.71 சதவீதம் வாக்குகளும், ஜம்கண்டியில் 81.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    இன்று பதிவான வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #votingconcludes #karnatakabypolls
    கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டசபை மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. #KarnatakaBypolls #Shimoga
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 வாக்காளர்கள் உள்ளனர்.  பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



    மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஷிமோகா தொகுதியில் தன் மகன் ராகவேந்திரா வெற்றி பெறுவது 101 சதவீதம் உறுதி என்கிறார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இதேபோல் பெல்லாரி, ஜம்கண்டியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார்.  #KarnatakaBypolls #Shimoga
    கர்நாடகத்தில் 2 சட்டசபை, 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். #Karnatakabypolls
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல்-மந்திரி குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதையடுத்து ராம நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்துநியாமகவுடா விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து கர்நாடக சட்டசபையில் ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய தொகுதிகள் காலியாக இருக்கின்றன.

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட எம்.பி.க்களாக இருந்த எடியூரப்பா, ஸ்ரீராமுலு, புட்டராஜூ ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து கர்நாடகத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.

    இந்த நிலையில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க் கிழமை) கடைசி நாள் ஆகும்.



    இந்த நிலையில் நேற்று பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். ஜனதா தளம்(எஸ்) சார்பில் ராமநகரில் அனிதா குமாரசாமி, மண்டியாவில் சிவராமேகவுடா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். சிவராமேகவுடா 4 முறை மனு தாக்கல் செய்தார். அந்த கட்சியின் சிவமொக்கா தொகுதி வேட்பாளர் மது பங்காரப்பா இன்று(செவ்வாய்க்கிழமை) மனு தாக்கல் செய்கிறார்.

    பா.ஜனதா சார்பில் மண்டியா தொகுதியில் டாக்டர் சித்தராமையா, ராமநகர் தொகுதியில் சந்திரசேகர், சிவமொக்காவில் ராகவேந்திரா, ஜமகண்டியில் ஸ்ரீகாந்த் குல்கர்னி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பல்லாரி தொகுதியில் வேட்பாளரான ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தா இன்று மனு தாக்கல் செய்கிறார்.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் உக்ரப்பா பல்லாரி தொகுதி யிலும், ஆனந்த் நியாமகவுடா ஜமகண்டியிலும் இன்று மனு தாக்கல் செய்கிறார்கள். மனுக் கள் மீதான பரிசீலனை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. #Karnatakabypolls

    கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ராமநகர் தொகுதியில் போட்டியிட அனிதா குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். #AnithaKumaraswamy
    பெங்களூரு:

    சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கியமான அரசியல் கட்சிகள் இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை.

    இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நாளை(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று(திங்கட்கிழமை) மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளன.

    அதன்படி ராமநகர், மண்டியா, சிவமொக்கா ஆகிய 3 இடங்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஜமகண்டி, பல்லாரி ஆகிய 2 இடங்களில் காங்கிரசும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

    இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க காங்கிரஸ் சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டியா தொகுதிக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், சிவமொக்கா தொகுதிக்கு மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, ராமநகர் தொகுதிக்கு டி.கே.சுரேஷ் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மண்டியா, ராமநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்கும் முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். 50 ஆண்டுகாலமாக தேவேகவுடா குடும்பத்தை எதிர்த்து அரசியல் செய்துவிட்டு, இப்போது திடீரென அக்கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொன்னால் எப்படி என்று நிர்வாகிகள் கேட்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள், இது கட்சி மேலிடத்தின் முடிவு, அதை ஏற்று அனைவரும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே ராமநகர் சட்டமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் முதல்-மந்திரியின் மனைவி அனிதா குமாரசாமி இன்று(திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.



    மதியம் 1 மணியில் இருந்து 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொள்கிறார். இந்த நிலையில் நேற்று தேவேகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனிதா குமாரசாமி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

    இதேபோல், ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில், சாலை விபத்தில் மரணம் அடைந்த சித்துநியாமகவுடா எம்.எல்.ஏ. வின் மகன் ஆனந்த் நியாமகவுடா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சித்தராமையா 3 நாட்கள் ஜமகண்டியில் தங்கி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் இன்று(திங்கட்கிழமை) ஜமகண்டிக்கு செல்கிறார். ஜமகண்டியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீகாந்த் குல்கர்னி நிறுத்தப்படுகிறார். இவர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா களம் காண்கிறார். மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் சிவராமேகவுடா களம் இறங்குகிறார். அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி டாக்டர் சித்தராமையா போட்டியிடுகிறார்.

    ராமநகர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் அனிதா குமாரசாமியை எதிர்த்து, பா.ஜனதா சார்பில் சந்திர சேகர் களம் காண்கிறார். இவர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.பி. சாந்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கிறார்கள். பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AnithaKumaraswamy


    கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. #KarnatakaBypoll #Jayanagar
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று நடந்தது.

    அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத பாபுவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    சட்டசபை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ், ஜேடி.எஸ். கூட்டணி அமைத்துள்ளதால், ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.டி.எஸ். ஆதரவு அளித்துள்ளது.

    ஜெயநகர் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மொத்தம் 216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் பெண்களுக்கென்று 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 துணை ராணுவ படையினரும் 350 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



    23 பறக்கும்படை போலீசார் தொகுதி முழுவதும் ரோந்து சுற்றிவருகிறார்கள். இன்று காலை 6 மணி முதலே வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

    பா.ஜனதா வேட்பாளர் பிரகலாதபாபுவும் ஓட்டுப் போட்டார். நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன் 51-வது வாக்குச்சாவடியான சுதர்‌ஷன் வித்யாமந்திர் பள்ளியில் ஓட்டுப் போட்டார். தொடர்ந்து மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 500 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 16 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 184 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஓட்டுப்பதிவுக்காக ஜெயநகர் தொகுதியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் ஓட்டுக்கள் 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன. #KarnatakaBypoll #Jayanagar

    ×